கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஏத்தகிணறு கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் மாட்டு கொட்டகையில் சென்று சோதனை செய்த போது அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.