திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி அவர்கள், தலைமையில் “நல்லிணக்க நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். “நல்லிணக்க நாள் உறுதிமொழி” நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு ஏதுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா