திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் (04-03-2025) ம் தேதியன்று இரவு ரோந்து பணியிலிருந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், மாடசாமி பேருந்து நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த மடிக்கணினி மற்றும் பையில் இருந்த ரூபாய் 1,42,396/- மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை கண்டெடுத்து அவற்றை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். (05-03-2025) அன்று, மேற்படி பையை உரிமை கோரி வந்த தென்காசி மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவரிடம் தவறவிட்ட ரூபாய் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து ஒப்படைத்தார்கள். தனது பணம் மற்றும் மற்றும் மடிக்கணினியை பெற்று கொண்ட உரிமையாளர் காவல் துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் பையை ஒப்படைத்த குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமியின் நற்செயலை காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம்(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) ஆகியோர் பாராட்டினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்