திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுல்தான் (22) இவர் மீது, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து அவர், குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை தாசில்தார் சக்திவேலனிடம் கடந்த 6-ந்தேதி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
இருப்பினும் கடத்தி பணம் பறித்த வழக்கில் சுல்தான் ஈடுபட்டுள்ளார். நன்னடத்தை விதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட சுல்தானை, ஓராண்டு சிறையில் அடைக்க தாசில்தார் சக்திவேலன் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் வேடசந்தூர் போலீசார் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.