திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் மூக்கம்மாள்(43). இவர் (18.04.2025) இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து செல்லும்போது அவருக்கு எதிரே முகக்கவசம் அணிந்து வந்த இரு இளைஞர்கள் திடீரென மூக்கம்மாள் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்கும் பொழுது மூக்கம்மாள் சப்தம் போடவே, பறித்த நகையை கீழே போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் மூக்கம்மாள் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை அடுத்த மேல தாழையூத்து சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ராபிக் (32). தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்த பிரபு (29). என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குற்ற சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில், அதில் ஈடுபட்ட இருவரை கைது செய்த மாநகர காவல்துறையினரை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.பா., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்