மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி வாசித்தார். கல்வி, அறிவாற்றல், நட்பு, உதவி, இயற்கை நலன் உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தனர்.
சேவாலயம் விடுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மற்றும் அறிவழகன் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி