கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்திஷ் (27). என்பவர் தியாகதுருகம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தபோது தியாகதுருகம் காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார், அப்போது அவரிடமிருந்து பத்து கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது, இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார், இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது, தொடர்ந்து இது போன்று குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று (19.07.2025)-ந் தேதி கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு சார்வு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.