திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை சாமான்கள் உள்ளிட்டவைகள் திருடு போனது குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட போளியம்மனூர் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் கார்த்திக் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா