திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (23.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி காவல் துணை ஆணையர்கள், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்), ஆகியோர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளினர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி கீழ்கண்டவாறு எடுத்துக்கொண்டனர்.
“மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















