கள்ளக்குறிச்சி: இன்று (23.01.2026)-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி – மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம். என்று உளமார உறுதிமொழி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சக்தி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
















