கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரை படியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அசோக் குமார் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. விஜய் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், குறிப்பாக போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி தொடர் பான Link ல் செல்ல கூடாது, மற்றும் தற்போது பெருகி வரும் E CHALLAN FRAUD, EB BILL Fraud, Part Time Job Fraud குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.