தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ACTU ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை சரக காவல்துறை துணை தலைவரும்,(பொறுப்பு) திருநெல்வேலி மாநகர காவல் ஆனையருமான சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார், பின்னர் அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உடனிருந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















