திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக (TVS Excel) இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.வீரபாண்டியன், திரு.ஜார்ஜ் எட்வர்ட் , தலைமை காவலர்கள் திரு.ராதாகிருஷ்ணன் திரு.முகமது அலி, முதல் நிலைக் காவலர்கள் திரு.விஸ்வாசம், திரு.சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர், சிசிடிவி தலைமை காவலர்கள் திரு.ஜான் மற்றும் திருமதி.செல்வி ஆகியோரின் உதவியுடன் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது. M.M.கோயிலூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(38) மற்றும் ஹக்கீம் செட் (36) என்பவர்களென தெரியவந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 05 (TVS Excel) இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா