திண்டுக்கல் : நத்தம் தேவதாஸ் நகரை சேர்ந்த சாந்தி (35), இவரது வீட்டின் அருகே வேப்பமரத்தில் பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மரத்தில் தொங்கி கொண்டிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆகும். அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா