திருநெல்வேலி: தீயணைப்பு துறை இயக்குனர், ஆபாஷ் குமார், இ.கா ப., உத்தரவுபடி திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலர், சரவணபாபு அறிவுரையின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்களுக்கு ஐந்து நாள் சிறப்பு பயிற்சி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்றது. ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மைக்கேல் பயிற்சி வழங்கினார்.
பயிற்சியின் போது, மீட்பு காலத்தில் கயிற்றில் முடிச்சுகளை துரிதமாக போட்டு உயிர்களை எப்படி காப்பது குறித்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, வண்ணார்பேட்டையில் உள்ள உயரமான கட்டடத்தில் கயிற்றின் மூலம் மற்றொரு கட்டடத்தில் உள்ளே சென்று பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
