திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமை காவலர் திரு.ராமர் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் பாரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 100 வட மாநிலத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினார்கள். இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.