திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் மோசடி சம்பந்தமான பலவிதமான புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக பொதுமக்களிடமிருந்து குறிப்பாக, online trading ( ஆன்லைன் டிரேடிங்) செய்யும் நபர்களை குறி வைத்து, மோசடி நபர்கள் தாங்கள் சொல்லும் செயலி மூலமாக டிரேடிங் செய்தால் 50% முதல் 60% வரையில் லாபம் பெறலாம் என்று கூறியதை உண்மை என நம்பி பொதுமக்கள் மற்றும் online trading செய்பவர்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்து ஏமாந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் யாரும் RBI ஆல் அங்கீகரிக்கப்படாத online trading செயலி வழியாக பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் online trading செய்யும்போது கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க பொது மக்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது போன்று பண மோசடி நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையதளத்தில் அல்லது 1930 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்