தூத்துக்குடி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப, அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் (11.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வடபாகம் காவல் நிலைய வளாகம் அருகில் உள்ள துப்பறியும் நாய் படைப் பிரிவு ஆகியவற்றில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
















