திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் வருடம் (17), வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற குண்டாம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24), என்பவரை போக்சோ சட்டத்தில் எரியோடு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சத்தியபிரபா அவர்கள் நீதிமன்ற முதல்நிலை காவலர் திருமதி.கலாராணி மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (17.11.2022) -ம் தேதி திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஆனந்தகுமார் என்பவருக்கு 23 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.23,000/- அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா