சூதாடிய கும்பல் கைது, சாணார்பட்டி காவல்துறையினர்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே லாட்டரி விற்ற முதியவர் மற்றும் பணம் வைத்து சூதாடிய கும்பலை சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார் ,அவர்களது தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம், போக்சோவில் கைது!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (51),இவர், (15), வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணனை கைது செய்தனர்.
ஆற்று படுகையில் மணல் திருட்டு,திண்டுக்கல் S.P ஆய்வு!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அணைப்பட்டி வைகை ஆற்று படுகையில் இரவு பகல் மணல் திருட்டு நடப்பது குறித்து கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் கண்டன போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதனை அடுத்து சம்பவஇடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்கள் ஆய்வு செய்தார். உடன் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர், விளாம்பட்டி காவல் ஆய்வாளர், மற்றும் சார்பு ஆய்வாளர் இருந்தனர்.
மதுபானம் விற்பனை செய்த 4 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், கள்ள சந்தையில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 4 பேரை வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன், தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்
விபத்து ஏற்படுத்திய காரில், 350 கிலோ குட்கா பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து 350 கிலோ குட்கா பறிமுதல்காரில் வந்தவர்கள் தப்பி ஓட்டம் காரில் 3 பேர் இருந்ததாக தகவல்
இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கொடைக்கானல் அருகே, மாணவன் உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பேத்துப்பாறை பகுதியில் அமைந்துள்ள, அஞ்சு வீடு அருவிப்பகுதிக்கு சுற்றுலா, சென்ற கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த, (17) வயது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அருவி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழப்பு… இது குறித்து காவல்துறையினர் விசாரணை.
மாருதி கார் திருட்டு, வாலிபருக்கு சிறை!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரையும், காருக்குள் இருந்த வாலிபரையும் பிடித்து விசாரணை செய்ததில், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்தார். அங்கிருந்த பதிவு செய்யப்படாத புதிய மாருதி காரை திருடி அதை விற்பதற்காக கொடைக்கானல் எடுத்து வந்தார்.
கொடைக்கானலுக்கு செல்ல வழி தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்றார். காக்காதோப்பு பிரிவில் கார் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. என தெரிய வந்தது இதையடுத்து கார் உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வேடசந்தூர் காவல்துறையினர் விஜய் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Related