திண்டுக்கல் : மதுரை மாவட்டம், செக்கானூரணியில் இருந்து தார்கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திண்டுக்கல் முத்தனம்பட்டி
நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, அருண்பாண்டி (23), ஓட்டினார் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில், கொடைரோட்டை அடுத்த மெட்டூர் மேம்பாலத்தில் லாரி வந்தது. அப்போது, லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை
இழந்த லாரி தடுப்புகளை உடைத்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி