திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே கடந்த மே மாதம் 7-ம் தேதி இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய செம்மடைப்பட்டியை சேர்ந்த சரவணகுமார்(26) தினேஷ்(19)கேரளாவை சேர்ந்த சிவன்(24) அஜித்(25)ஆகிய 4 பேரை கைது செய்து 7. 1/2 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மதுவிலக்கு DSP.முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா