திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த சேகர் (55). சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிய பாண்டித்துரை காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















