திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பிறகு நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 8 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி குற்றவாளி மணிகண்டனை பணகுடி காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (23.03.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்