திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா (53). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 06 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த அவருக்கு தென்காசி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தலைமறைவான பிச்சையாவை பாப்பாக்குடி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (10.05.2025) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்