திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் இரண்டல்லபாறையை சேர்ந்த வீரப்பன் மகன் ஆறுமுகம்(50). என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா