தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர புதிய காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
-
சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி திரு.மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி திரு.சுனில்குமார், மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் திரு.டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி, தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி திரு.ரவி, சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
தலைமையிட ஐஜி திரு.ஜெயராம், மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மத்திய மண்டல ஐஜி திரு.அமல்ராஜ், சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை ஐஜி திரு.கணேசமூர்த்தி, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.தினகரன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.பிரேமானந்த் சின்ஹா, மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண், சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருப்பூர் காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார், சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி டிஐஜி திரு.பாலகிருஷ்ணன், மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.விஜயகுமாரி, கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் திரு.ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள திருமதி.மகேஷ்வரி, சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் திரு.எழிலரசன், விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை ஆயுதப்படை டிஐஜி திரு.செந்தில்குமாரி, சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மதுரை டிஐஜி திருமதி.ஆன்னி விஜயா, திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை டிஐஜி (நிர்வாகம்) திரு.நரேந்திரன் நாயர், கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
ராமநாதபுரம் டிஐஜி திரு.ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.லட்சுமி, சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு
-
தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் திரு.லோகநாதன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை வடக்கு இணை ஆணையர் திரு.கபில் குமர் சி சரத்கர், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி திரு.கண்ணன், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் திரு.சந்தோஷ்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
காஞ்சிபுரம் டிஐஜி திருமதி.தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோவை டிஐஜி திரு.கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திண்டுக்கல் டிஐஜி திரு.ஜோஷி நிர்மல்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி திருமதி.புவனேஷ்வரி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அயல்பணியில் இருக்கும் திரு.அபிஷேக் திக்ஷித், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, டிஐஜியாக தொடர்கிறார்.
-
சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் திருமதி.மல்லிகா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார்.
-
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி திருமதி.சாமூண்டீஸ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்.
-
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.ராஜேஷ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி திரு.பாண்டியன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பூக்கடை துணை ஆணையர் திரு.ராஜேந்திரன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணாநகர் துணை ஆணையர் திரு.முத்துசாமி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
-
சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் திரு.மயில்வாகனன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.