திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு பிளேட்டுகள் ( சுமார் 1500 கிலோ எடை கொண்ட) காணவில்லை என மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர், சஜீவ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்ட தெற்கு பணவடலிசத்திரம், கார்த்திக் (29). சுப்பையாபுரம், கிரி பத்மநாதன் (18). மகேந்திரன் (26). ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்