இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் இரண்டு மாதத்தில் 4 நபர்களை கைது செய்து 25 1/2 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்கள்.