திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினர் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபர்கள் இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள், பரப்பாடியை அடுத்த ஆலங்குளம் கீழத் தெருவை சேர்ந்த ராமதாஸ் (39). நான்குனேரியை அடுத்த வழியனேரி, வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமாா் (44). ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 23 கிலோ 580 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவர்களை ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா கைது செய்து புகையிலை பொருள்கள்,மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்