தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி (05.01.2026) அன்று குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் இலஞ்சி ராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் ரவி @ ரவி ராஜ பாண்டியன் (வயது 45). என்பவர் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான 343 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ரவியை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















