திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, செங்குளம் இரயில்வே கேட் அருகே ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்ததில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக ஜல்லி கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் லாரி ஓட்டுநர், கடம்போடு வாழ்வை சேர்ந்த வேல்முருகனை (54). கைது செய்து அவரிடமிருந்து 1½ யூனிட் ஜல்லி கற்களையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்