இராமநாதபுரம்: இணைய மோசடியில் பணத்தை இழந்து தவித்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணுக்கு ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறை பெரிய ஆறுதலை அளித்துள்ளது. ஆன்லைனில் நடந்த மோசடி ஒன்றில் தேவி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.51,000/- பணத்தை இழந்துள்ளார். பணம் போன அதிர்ச்சியில் அவர் உடனடியாக ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டனர். சைபர் கிரைம் துறையின் மின்னல் வேக விசாரணை காரணமாக, மோசடி கும்பல் பணத்தை எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, இழந்த ரூ.51,000/- முழுவதுமாக வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட தொகையை, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS., தேவியிடம் உரிய ஆவணங்களுடன் ஒப்படைத்தார். சைபர் கிரைம் காவல்துறையின் இந்த விரைவான மற்றும் சிறப்பான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆன்லைன் மோசடிக்கு ஆளானோர் தாமதிக்காமல் உடனடியாக புகார் அளித்தால், இழந்த பணத்தை மீட்க முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி