அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்(10.06.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் தலைமையில் அரியலூர் நகரில் உள்ள அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறை பற்றியும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்காலந்தாய்வு கூட்டத்தில் சைபர் குற்றங்களின் போக்கு மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சைபர் குற்றங்களை தடுக்க வங்கிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள் சைபர் குற்றங்கள் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் சைபர் குற்றங்களை விசாரணை செய்வதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இக்கூட்டம் சைபர் குற்றங்களை தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்த உதவ வேண்டும் என்றும கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் (தலைமையிடம்) அவர்கள், மாவட்ட குற்ற பதிவேடு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள், மற்றும் வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.