திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசன்ன குமார், இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன்., தலைமையில் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், மற்றும் வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை பகிர்ந்து கொள்வதால், அறிமுகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்பதால் ஏற்படும் மோசடிகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இதுபோல் சைபர் கிரைம் சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















