திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண்ணின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்த புது மாப்பிள்ளை விமல் என்பவரை எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ. டி.எஸ்.பி.தெய்வம் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி,சப் -இன்ஸ்பெக்டர் லாய்டு சிங் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெண்கள், பெண் குழந்தைகள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா