கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் , காவல் ஆய்வாளர் மற்றும் கடலூர் மாவட்ட இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவி திருமதி. மீரா ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டது. சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இணையவழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்படுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக படித்த இளைஞர்களை குறி வைக்கும் Part Time Job Fraud ஆகியவை குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.