திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் PET இன்ஜினியரிங் கல்லூரியிலும், இராதாபுரம், இந்தியன் வேளாண்மை கல்லூரியிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், தலைமையில் காவல்துறையினர் பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்காமல் இருப்பது உட்பட ஆன்லைன் மோசடி தொடர்பான அனைத்து குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும், பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்