கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபேஸ் என்பவர் குமுதேப்பள்ளி கிராமத்தில் குடியிருந்து கொண்டு ஓசூர் சிப்காட்டில் உள்ள டைட்டான் வாட்ச் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (24.06.2025) ஆம் தேதி ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோடு அலசநத்தம் ஜங்ஷன் அருகே உள்ள சுசுகி ஷோரூம் அருகில் இரவு சுமார் 12.10 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது குற்றவாளி இருசக்கர வாகனத்தில் வந்து என்னிடம் அவருடைய அம்மாவுக்கு மிக அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று கேட்டதால் தன்னுடைய செல்போனை கொடுத்ததாகவும் அந்த நபர் போன் செய்வது போல் பேசிக்கொண்டே போனை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டதாகவும் பின்னால் சென்று அவரை பிடிக்க முடியவில்லை என்று ரூபேஸ் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து செல்போனை ஏமாற்றி திருடி சென்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.