கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது மிடுதேப்பள்ளி கிராமத்தில் உள்ள தொண்ண முனியப்பன் கோயில் அருகில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, ₹2,300/- ரூபாய் பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.