கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கணகண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள VHF கோழி பண்ணை பின்புறம் உள்ள தைலம் தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 12 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, ₹1,48,000/- ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் , செல்போன்கள், மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.















