கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வேப்பலாம்பட்டி கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 5 நபர்களில் 3 நபர்கள் போலீசாரை பார்த்து தப்பி ஓடி விட்டதாகவும், மீதமிருந்த மற்ற 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள் மற்றும் ₹3,200/- ரூபாய் பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.