திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் மகன் கணேஷ் நவீன்(21). இவர், கூடங்குளம் அருகே உள்ள தாமஸ்மண்டபம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கணேஷ் நவீன் கடந்த 2ஆம் தேதி தன்னுடைய சுமை ஆட்டோவை கடையின் உள்ளே நிறுத்திவிட்டு மறுநாள் வந்து பார்த்தபோது சுமை ஆட்டோ, எடைபார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டி விளையைச் சேர்ந்த குணசேகர்(43). மற்றும் இஸ்ரவேல் (41). ஆகிய இருவரையும் கைது செய்து சுமை ஆட்டோ, எடைபார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















