திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த விஜய்(43), என்பவரை தாண்டிக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கானது, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், தாண்டிக்குடி காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி