திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் சிறுமியை பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக முருகன்(57) என்பவரை போக்சோ வழக்கில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் எஸ். பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் குற்றவாளி முருகனுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.