திண்டுக்கல் : திண்டுக்கல், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாணார்பட்டி, தெற்குகளம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(58), என்பவரை போக்சோ வழக்கில் சாணார்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் S.P. பாஸ்கரன், அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.20,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.