கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுவனை கொலை செய்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.