திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்
அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்ததில், ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை, சூர்யா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அச்சிறுமியை மீட்ட காவல்துறையினர் சூர்யாவை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்