திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் ராமசிவன்(35). தொழிலாளி. இவர் பணகுடியைச் சேர்ந்த (17). வயது சிறுமியை ஏமாற்றி ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் முதல் பெண்குழந்தை பிறந்து தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்ததால் இது தொடர்பாக நான்குனேரி ஊர்நல அலுவலர் அமலை ரோஸ் நான்குனேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் ராமசிவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத