கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.1.2025) தேதி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நிதிமணி மற்றும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் திரு. வடிவேல் ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்மென வாழ்த்துரை வழங்கினார்.